நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் சமூகப் பராமரிப்பு நிலையம்

நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் 50 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சமூகப் பராமரிப்பு நிலையத்தில் நேற்று சமூக சேவைப் பிரிவு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா, மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சித்திரவேலு, நிருவாக உத்தியோகத்தர் எஸ் கணேஷமூர்த்தி, உள்ளிட்ட சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்

Related posts