பட்டாசி கொழுத்தியதால் பரபரப்பு!

சுவிசிலில் இருந்துவந்தவர் பட்டாசி கொழுத்தியதால் பரபரப்பு! கொக்கட்டிச்சோலை சிவன்கோயில் வண்ணக்குமாருக்கு சுகாதார பரிசோதகர் எச்சரிக்கை !

 
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஷ்வர ஆலயத்தின் வருடாந்த கொடியேற்றம் திருவிழா தேரோட்டம் என்பன நாட்டில் ஏற்பட்ட கொரோணா நோய் பரவலால் இந்த வருடம் முற்றாக நிறுத்தப்பட்டதாக ஆலய பரிபாலன சபையால் அறிவிக்கப்பட்டது.
 
ஆயினும் பூசைகள் மட்டும் திருவிழா குடி சார்ந்த அடியார்கள் ஓரிருவர் வருகைதந்து கடந்த ஒரு வாரமாக நடத்திவருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று 22/09/2021, புதன்கிழமை இடம்பெற்ற ஒரு குடிசார் பூசையின்போது ஆலய வண்ணக்குமார் நிர்வாகத்தினருக்கு தெரியாமல் சுவிஷ்நாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் பட்டாசி வானவெடிகளை வெளிவீதியில் எவருக்கும் தெரியாமல் திடீரென கொழுத்தியுள்ளார்.
 
இதனை நேரில் அவதானித்தவர்கள் அப்பகுதி சுகாதார பரிசோதகர் கொக்கட்டிச்சோலை பொலிசாரின் கவனத்திற்கு தொலை பேசிமூலமாக தெரியப்படுத்தியதை அடுத்து ஆலய தலைவருக்கு அப்பகுதி சுகாதாரபரிசோதகரால் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது
 
தற்போதய கொரோணா வைரஷ் காரணமாக கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஷ்வர ஆலயம் 15, பேருடன் அன்டியன் பரிசோதனை மேற்கொண்டு ஆலய கொடியேற்றம் உள்திருவிழா செய்வதற்கு சம்பந்தப்பட்ட பிரதேச சுகாதார அத்தியட்சர் ஆலோசனை வழங்கிய நிலையில் ஆலய வண்ணக்குமார் ஆலய குருமார் இறுதி நேரத்தில் இதற்கு சம்மதம் தெரிவிக்காமையால் இந்த வருடம் வருடாந்த உற்சவம் இடம்பெறமாட்டாது என ஆலய வண்ணக்குமார் ஊடக மாநாட்டில் அறிவித்தனர்,
 
இதேவேளை கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஷ்வர ஆலய பிரதம குரு சச்சிதானந்தக்குருக்கள் சுகவீன காரணமாக ஆலய பூசைகளில் கலந்து கொள்ளவில்லை என ஆலய நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
 
எதிர்வரும் 26/09/2021, ஞாயிற்றுக்கிழமை வருடாந்த தேரோட்டம் இடம்பெற இருந்தபோதும் இவ்வருடம் நாட்டின் சூழலை கருத்தில் கொண்டு தேரோட்டம் அடுத்த வருடம் வரை பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது!

Related posts