விபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி !

மஹியங்கனை விபத்தில் மட்டக்களப்பு கல்லடி , டச்பார் -வாழைச்சேனை பகுதிகளை சேர்ந்த  10 பேர் பலி- மேலும் இருவர் கவலைக்கிடம்

இன்று அதிகாலை 1.30மணியளவில் மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து தியதலாவ நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றும் பதுளை ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில், வேனில் பயணித்த 12 பேர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு கல்லடி , டச்பார் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களை சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்கள் ஆவார்கள்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்கள், மூன்று பெண்களும் அடங்குகின்றனர். உயிரிழந்தவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை தெரியவரவில்லை.

வேனின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக வீதியின் பிழையான பகுதியில் பயணித்துள்ளார். இதனால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சாரதி மட்டக்களப்பு டச்பார் பகுதியை சேர்ந்த ஜோன் என குறிப்பிடப்படுகிறது.

Related posts