பட்டிருப்பு சந்தியில் வீதிச் சுற்றுவட்டம்(Round about) அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்

பட்டிருப்பு சந்தியில் வீதிச் சுற்றுவட்டம்(Round about) அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் 18-06-2020 பிற்பகல் 2 .00 மணிக்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை சபா மண்டபத்தில் கௌரவ தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதேசசபைச்  செயலாளர் கே.லெட்சுமிகாந்தன் ,மண்முனை தென் எருவில் பற்று உதவிப் பிரதேச செயலாளர்,  வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்றுப் பொறியியலாளர் உள்ளிட்ட பொறியியலாளர்கள், களுவாஞ்சிகுடி வட்டார கௌரவ உறுப்பினர்கள், சபை செயலாளர் , பட்டிருப்பு RDS,  RDD தொழிநுட்ப உத்தியோகத்தர், சுற்றுவட்ட அமைவிடத்திற்கு அருகாமையில் உள்ள காணி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

 இங்கு காணி உரிமையாளர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சுற்றுவட்டம் அமைப்பதற்கு காணி உரிமையாளர்களது சம்மதம் பெறப்பட்டது. இங்கு தவிசாளரினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி அளித்துள்ளது.

Related posts