பாங்கொக்கில் மூன்று சர்வதேச விருதுகளும் ஐந்து நாடுகளுடைய விசேட சிறப்பு விருதுகளும் வென்ற ஈழத்து தமிழ் விஞ்ஞானி

புதன்கிழமை மாலை பாங்கொக்கில் நடைபெற்றுமுடிந்த சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்பு மற்றும் தொழினுட்பக் கண்காட்சி மற்றும் போட்டி – 2019 யில் ஈழத்து தமிழ் விஞ்ஞானி சோமசந்தரம் வினோஜ்குமார் 3சர்வதேவ பதக்கங்களையும் 5 நாடுகளுடைய விசேட சிறப்பு விருதுகளையும் பெற்று சாதனைபடைத்துள்ளார்.

அவர் மேடையில் தமிழர் கலாசாரப்படி வேட்டி கட்டிச்சென்று தனக்கான பதக்கங்களைப்பெற்ற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண பல்கலைக்ககழகத்தில் பயிலும் இவர் அம்பாறை மாவட்டத்தின் சம்மடாந்துறையிலள்ள கோரக்கர்  கிராமத்ததைச் சேர்ந்தவராவார். இவர் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவுள்ளார்.

( மூன்று சர்வதேச விருதுகளும்

ஐந்து நாடுகளுடைய விசேட சிறப்பு விருதுகளும் ) விபரம் வருமாறு

1. SHOES’ HELPER எனும் கண்டுபிடிப்புக்கு பொதுப் பயன்பாடுகள் தொழினுட்ப பிரிவில் “சர்வதேச வெள்ளி விருதும்” , Association of British Investors & innovators of United Kingdom இருந்து SPECIAL PRIZE AWARD ,

Manila Young Inventors Association of Philippines இருந்து PHILIPPINES GOLD விருதும்

02. TWO WHEELS’ HELPER எனும் கண்டுபிடிப்புக்கு பொறியியல் தொழினுட்ப பிரிவில் “சர்வதேச வெண்கல விருதும்” Macao Invention and Innovation Association of Macao இருந்து LEADING INNOVATION AWARD ,

Indian Innovator Association of India இருந்து SPECIAL INNOVATION விருதும்

03. WIRE BUILDING TOOL எனும் கண்டுபிடிப்புக்கு கட்டிட நிர்மாண தொழினுட்ப பிரிவில் ” சர்வதேச வெண்கல விருதும்”,

Citizen Inventor & Innovator Association of Singapore இருந்து OUTSTANDING INNOVATION விருதும்

Related posts