‘வங்கியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம்’

முகத்தை மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவர், ராகம – குருகுலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமிய வங்கியொன்றில் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

(05) மாலை 3 மணியளவில் குறித்த வங்கிக்கு வந்த இருவரும், அங்குள்ள ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மி​ரட்டி, 3இலட்சத்து 80ஆயிரம் ரூபாயையும் தங்காபரணங்கள சிலவற்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ​மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts