பாதையை விட்டு கார் தடம்புரண்டுள்ளது.இருவர் சிறுகாயம்

மட்டக்களப்பு தாழங்குடாவில் பாதையை விட்டு கார் தடம்புரண்டுள்ளது.இருவர் சிறுகாயம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் இன்று செவ்வாய்க்கிழமை(16)அதிகாலை 1.30 மணியளவில் கல்முனையில் இருந்து மட்டக்களப்புக்கு இருவர் காரில்  பயணித்துக்கொண்டிருக்கையில் காரானாது கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அமைக்கப்பட்ட மதகுடன் மோதுண்டு பாதையை விட்டு தரண்புரண்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.

இவ்விபத்தினால் காரில் பயணித்த இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன்,காரின் முன்பகுதியானது பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுள்ளதுடன் இவ்விபத்து சம்பந்தமாக காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related posts