புளியங்காய் பறிக்கச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம் !

திருகோணமலை கந்தளாய் பகுதியில் புளியம் மரத்தில் ஏறிய பதினைந்து வயதுடைய சிறுவன் ஒருவன் மரத்திலிருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த ஹசித்த எமஸான் என்ற பதினைந்து வயதுடைய சிறுவனே மரத்திலிருந்து விழுந்தவராவர். இச்சம்பவம் புதன்கிழமை (4) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். பாடசாலை விட்டு வீட்டுக்குச் சென்று நண்பர்களுடன் வீட்டுக்கு அருகாமையிலுள்ள புளியம் மரத்திற்கு புளியம் பழம் பறிக்க மரத்தில் ஏறிய போதே வழக்கி விழுந்ததாகவும் கை மற்றும் கால்கள் உடைந்துள்ளதோடு ஆபத்தான நிலையிலுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts