பிரேரணை தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு

மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸுடனான கலந்துரையாடலின் போது எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதிக்கும் இடையில் நேற்று (03) பாராளுமன்றத்தில் சந்திப்பு இடம்பெற்றது.

மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பிலும் கலந்துரையாடிய இரா. சம்பந்தன், குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related posts