இராஜாங்க அமைச்சர் விஜயகலா மீதான விசாரணைகளுக்கு உத்தரவு!

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிற்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் இன்று (புதன்கிழமை) பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் குறித்து தெரிவித்த கருத்துத் தொடர்பில் காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக குறித்த முறைப்பாடு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் குறித்த விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts