பெரியகல்லாற்றில் இடம்பெற்ற வாகனவிபத்தில் பாடசாலை மதில் சேதமடைந்துள்ளது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்ட பெரியகல்லாறு பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை(11.5.2018)அஅதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற வாகனவிபத்தில் பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலய பாடசாலையின் சுற்றுமதில் சேதமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பாதிகாரி ஆர்.எம்.ரத்நாயக்க தெரிவித்தார்.

வாழைச்சேனையிலிருந்து உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று மீண்டும் பாண்டிருப்பு புறப்பட்டுக் கொண்டிருக்கையில் நித்திரை மயக்கத்தில் காரைச் செலுத்தியதானாலே கார் பாடசாலையின் மதிலுடன் விபத்துக்குள்ளானதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.காரில் பயணித்தவர்களுக்கு தெய்வாதீனமாக விபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை. இது சம்பந்தமாக போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related posts