பொதுமுகாமையாளர் மற்றும் முன்னாள் உதவி பொது முகாமையாளர் ஆகியோருக்கு சுமார் 7.5கோடி ரூபாவை சம்பள நிலுவை

இலங்கையின் மக்கள் வங்கி தமது பொதுமுகாமையாளர் மற்றும் முன்னாள் உதவி பொது முகாமையாளர் ஆகியோருக்கு சுமார் 7.5கோடி ரூபாவை சம்பள நிலுவையாக செலுத்தியுள்ளதாக அரச நிறுவனங்களின் கணக்குகளை ஆராயும் நாடாளுமன்ற குழுவான “கோப்” பினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, வங்கியின் முகாமையாளரான என்.வசந்தகுமார மற்றும் முன்னாள் சிரேஸ்ட உதவிப்பொது முகாமையாளர் ஆகியோருக்கு இந்த தொகை செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமுகாமையாளருக்கு மாத சம்பளமாக 2.1மில்லியன் ரூபாய்கள் செலுத்தப்படுகின்றன. எனினும், அந்த சம்பளம் வங்கியின் மற்றும் ஒரு முகாமைதிட்டத்தின் கீழ் செலுத்தப்பட்டு வருகிறது.

இவர்கள் இருவருக்கு வருடாந்தம் 10வீத சம்பள உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts