மக்களுக்கு எச்சரிக்கை! சீரற்ற காலநிலை காரணமாக 7 பேர் உயிரிழப்பு! 3438 குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இது வரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12 மாவட்டங்களில் 3438 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது பொல்கொல்ல நீர்தேக்கத்தின் 7 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளில் இருப்பவர்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நில்வள கங்கை, ஜின் கங்கை, களு, களனி, மா ஓயா ஆறுகளும் பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts