லண்டனில் இலங்கை தமிழ் இளைஞர் கத்தி குத்துக்கு இலக்காகி பலி!

பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அருனேஸ் தங்கராஜா எனும் இளைஞரே மர்மநபர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் தெற்கு லண்டனில் அமைந்துள்ள மிட்சம் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று சனிக்கிழமை 28 வயதுடைய அருனேஸ் தங்கராஜா என்ற இளைஞர் , கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், சிகிச்சைகள் பலனளிக்காமல் அவர் உயிரழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வாழ்வாதாரம் தேடி பிரித்தானியா சென்ற குறித்த இளைஞரின் குடியிருப்புக்கு அருகாமையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 44 வயதான சந்தேக நபரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பிரித்தானிய பொலிசார் தெரிவித்துள்ளனர்

Related posts