மட்டக்களப்பில் உதைபந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான மூன்று நாள் பயிற்சிநெறி.

இலங்கை உதைபந்தாட்ட சம்மௌனத்தால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான போட்டிப்பரீட்சையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 60 பேர் சித்தியடைந்து தெரிவு செய்யப்பட்டார்கள்.இவர்களுக்கு மட்டக்களப்பு நகரில் உதைபந்தாட்ட சட்ட திட்டங்கள் சம்பந்தமாகவும்,ஆளுமை பண்புவிருத்தி,உடற்திறன் விருத்தி சம்பந்தமான 3நாள் பயிற்சிநெறி மட்டக்களப்பில் வெள்ளி,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகின்றது.முதல்நாள் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு வெபர் விளையாட்டுப் மைதானத்தில்  வெள்ளிக்கிழமை(6)காலை நடைபெற்றது.இதன்போது உதைபந்தாட்ட மத்தியஸ்தர்கள்,மற்றும் இலங்கை உதைபந்தாட்ட சம்மௌன பயிற்சி கல்லூரியின் விரிவுரையாளர் ஐ.எஸ்.ஐ.எஸ்.நாகந்தல மற்றும் முன்னாள் சர்வதேச உதைபந்தாட்ட சம்மௌனத்தின் உதைபந்தாட்ட நடுவர் எஸ்.பீ.ரியூடர்,உட்பட பலர் இருப்பதை படத்தில் காணலாம்.

Related posts