மட்டக்களப்பில் ரயிலில் மோதிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த ரயிலுடன் இளைஞர் ஒருவர் மோதி உயிரிழந்த சம்பவம் இன்று (24) அதிகாலை மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு புன்னைச்சோலை பிரதேசத்தைச் சோந்த 25 வயதுடைய விக்கினேஸ்வரராஜா சதூசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
குறித்த நபர் நேற்று முன் இரவு கருவப்பங்கேணி பிரதேசத்தில் உறவினர் ஒருவரின் மரணவீட்டிற்கு சென்றுள்ள நிலையில் அதிகாலை 4 மணியளவில் கொழும்பல் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற ரயிலுடன் கருவப்பங்கேணி பிரதேசத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts