மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் வீழ்ந்து 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் தற்கொலை

(சா.நடனசபேசன்)

காத்தாங்குடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்தில் சற்றுமுன்னர் 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டதாக காத்தாங்குடி பொலீஸார் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக மேலும் விசாரிக்கையில் குடும்பத் தகராறு காரணமாக விரக்தியடைந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர் கூறியதாக தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொண்ட நபரது சடலம் மீட்பது தொடர்பாக கடற்படையினர் மற்றும் பிரதேசவாசியினர் மீனவர்கள் என பலரும் தேடிவருவதாக காத்தாங்குடி பொலீஸார் தெரிவித்திருந்தனர்.

Related posts