மட்டக்களப்பு தாழங்குடா கல்வியல் கல்லூரியின் பீடாதிபதியாக புண்ணியமூர்த்தி கடமையை பொறுப்பேற்றார்.

மட்டக்களப்பு தாழங்குடா கல்வியல்கல்லூரியில் 5 வருடங்களுக்கு மேலாக பீடாதிபதியாக சேவை வகித்த S.ராஜேந்திரன் அவர்கள் திங்கட்கிழமை(29)தனது 60ஆவது வயதில் ஓய்வு பெற்று செல்வதுடன் புதிய பீடாதிபதியாக  கல்லூரியின் உபபீடாதிபதியாக இருந்த திரு K.புண்ணியமூர்த்தி ஐயா அவர்கள் இன்று உத்தியோகபூர்வமாக புதிய பீடாதிபதியாக மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியில் பதவியேற்றுக்கொண்டார்.

மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியின் முன்னால் பீடாதிபதி  எஸ் .இராஜேந்திரன் ஓய்வு பெற்று செல்லும் நிலையில் கல்விக்கல்லூரியின் நான்காவது பீடாதிபதியாக  கடமைகளை பொறுப்பேற்றுள்ள  புதிய பீடாதிபதி கே.புண்ணியமூர்த்தியை வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்விக்கல்லூரியில் நடைபெற்றது.

ஓய்வுபெற்று செல்லும் முன்னால் பீடாதிபதி எஸ் .இராஜேந்தின தமது பீடாதிபதியின் பொறுப்புக்களை கையளித்ததுடன் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.இதனைதொடர்ந்து உபபீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் புதிய பீடாதிபதிக்கு ,ஒய்வு பெற்று செல்லும் பீடாதிபதிக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டனர்.

இவர்களை மாலை அணிவித்து வரவேற்பதையும்,புதிய பீடாதிபதி கையொப்பமிடுவதையும்,முன்னாள் பீடாதிபதிக்கு அவரின் சேவையை பாராட்டி வாழ்த்துமடல் வழங்கி பாராட்டி கௌரவித்தார்கள்.

Related posts