மட்டக்களப்பு நகரில் மத்திய வீதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது

மட்டக்களப்பு நகரில் மத்திய வீதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரத்திற்கான பிரதான தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் காரியாலயம் சனிக்கிழமை(04) மத்திய வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

இப்பிரதான தேர்தல் பிரச்சார அலுவலகத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவும் மற்றும் முன்னாள் பிரதியமைச்சரும்,வேட்பாளருமான எம்.எஸ்.எம்.அமீரலி,ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான தி.லோகநாதன்,திருமதி.ஜெயச்சந்திரிகா ஜெகதீஸ்வரன்(மீனா),எஸ்.மகேந்திரன்,எஸ்.கேசவக்குமார்,எல்.ஜெரூசன்,பொதுமக்கள் கலந்து கொண்டு பிரதான தேர்தல் காரியாலயத்தை உத்தியோகபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைத்தார்கள்.இந்நிகழ்வானது இன்று(04) நண்பல் 12 மணியளவில் இல 70, மத்திய வீதி, மட்டக்களப்பு எனும் முகவரியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள்,அமைப்பாளர்கள், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள்,பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.

Related posts