மட்டக்களப்பு புனித இருதயநாதர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று நடைபெறவுள்ளது.

“உதிரம் தன்னை உவந்தளித்து உன்னத உயிர்தனை காப்போம்” என்ற தொனிப்பொருளில்  மட்டக்களப்பு புனித இருதயநாதர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும்  இரத்ததான முகாம் ஒன்று நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு புனித இருதயநாதர் ஆலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(07) 
காலை 8.30  மணியளவில் மாபெரும்  இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது.இரத்தான முகாமில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பங்குபற்றி இரத்ததானம் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் அனர்த்தங்களால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கே இந்த இரத்தானம் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இருதயநாதர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார். 

Related posts