மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் 72வது சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.

நிகழ்வு நாட்டின் 72வது சுதந்திர தின நிகழ்வு அனைத்து பிரதேசங்களிலும் கொண்டாடப்படுகின்றது. இந்த நிலையில் இந் நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திலும் நேற்று  காலை உதவி பிரதேச செயலாளர்  சுபா சதாகரன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி   பிரதேச செயலாளர்  சுபா சதாகரன்  அவர்களால் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தேசியகொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்கள் மத்தியில் சுதந்திர தினம், அரச அலுவலர்களின் கடமைகள் தொடர்பில் உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன்  உரையாற்றினார்.

அதனையடுத்து, பிரதேச செயலகத்தில்  உதவி பிரதேச செயலாலர் தலைமையில் பிரதேச செயலகவளாகம் மற்றும் பிரதேசத்தின் 24 கிராம சேவகர் பிரிவுகளிலும்  சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் மரநடுகை, வீட்டுத் தோட்டங்களுக்கென இங்கு வருகைதந்த கிராம மங்களுக்கு விதைப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டது.

????????????????????????????????????
????????????????????????????????????

Related posts