மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக டெங்குவாழைச்சேனை, காத்தான்குடி. மட்டக்களப்பு பகுதிகளில் அதிக நோயாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. கடந்த பெப்ரவரி 19 ஆந் திகதி தொடக்கம் பெப்ரவரி 26 ஆந் திகதி வரையும் 142 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
 
 
இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான மண்முனைவடக்கு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 33 நோயாளர்களும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 நோயாளர்களும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 29 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். 
 
 
இதேவேளை ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 நோயாளர்களும், கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 நோயாளர்களும்;, மண்முனைப் பற்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 நோயாளர்களும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 நோயாளர்களும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 நோயாளர்களும், ஏறாவூர் நகர், வாகரை,  பட்டிப்பளை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 03 நோயாளர்களும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 நோயாளர்களும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 01 நோயாளருமாக மொத்தம் 142 பேர் டெங்கு நோய் பாதிப்புக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்;டுள்ளனர்.   
 
 
இதுதவிர செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயினால் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் இதுவரை மரண எண்ணிக்கை 2 ஆகவும் டெங்கு நோயாளர்கள் 2055 ஆகவும் அதிகரித்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
 
இதேவேளை பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கிகிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காதவகையில் சூழலை துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 
இருப்பினும் வவுனதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts