மண்டூரைச் சேர்ந்த திருமதி மனோன்மணி பரமானந்தராசா  ஆசிரியர் அவர்கள் 40 வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு

பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட  13 ஆம் கிராமம் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய மண்டூரைச் சேர்ந்த திருமதி மனோன்மணி பரமானந்தராசா  ஆசிரியர் அவர்கள் 40 வருட கல்விச் சேவையில் இருந்து நேற்று ஓய்வு பெற்றுள்ளார்.
மண்டூரைச் சேர்ந்த இவர் 1978.02.21 ஆம் திகதி ஆசிரியராக  முதல் நியமனம் பெற்று தம்பலவத்தை கனிஷ்டவித்தியாலயம்,மண்டூர் மகாவித்தியாலயம், 14 ஆம் கிராமம் சக்தி மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில்  ஆசிரியராக இருந்து சேவையாற்றியதுடன் கற்பித்தலிலும் சிறந்த முகாமைத்துவத்திலும் சிறந்து விளங்கிய இவர் இலங்கை ஆசிரியர் சேவையில் தரம் 1ஐ சேர்ந்தவர் அத்தோடு பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts