மண்டூர் கமநல கேந்திர நிலையத்தால் மரக்கறி நாற்றுக்கள் வழங்கி வைப்பு.

மண்டூர் கமநல சேவைகள் திணைக்களத்தினால் சௌபாக்கியா வீட்டுத் திட்ட அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் பொசன் நிகழ்வை முன்னிட்டு மரக்கறி நாற்றுக்கள் வழங்கும்  நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மண்டூர் கமநல கேந்திர நிலையத்தின் விவசாயிகள் ஒன்றுகூடல் மண்டபத்தில் வழங்கிவைக்கப்பட்டது.
 
மண்டூர்  கமநல சேவைகள் திணைக்களத்தின் கமநலஅபிவிருத்தி உத்தியோகத்தர் கோ.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மண்டூர் சமுர்த்தி வங்கி முகாமையாளர் , கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது சௌபாக்கியா வீட்டுத் திட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பொசன் நிகழ்வை முன்னிட்டு 70 பயனாளிகளுக்கு மிளகாய், கத்திரி போன்ற மரக்கறி நாற்றுக்கள் வழங்கி வைக்கப்பட்டது

Related posts