மதுபானசாலைகளை மூடுமாறு கோரிக்கை

நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு,நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளை மூடுவதற்கு, மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, கலால் திணைக்கள ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கடிதம் ஒன்றை கலால் திணைக்கள ஆணையாளருக்கு மத்திய மாகாண ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாகவும் நாட்டின் தற்போதைய நிலைமையில், மதுபானம் அருந்துபவர்களின் நடவடிக்கை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இத் தினங்களில் மதுபானசாலைகளை மூடுவதன் மூலம் சில பாரதூரமான நடவடிக்கைகளை கட்டுபடுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts