மனைவி தூக்கிட்டதனை கண்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை

ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மயிலம்பாவெளி பிரதேசத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்ததனை கண்டு சந்திரகுமார் கோபனா (28) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
அண்மையில் இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்ப தகராற்றினால் வீட்டின் அறையினுள் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதனை கண்ட கணவன் மனைவியை தூக்கில் இருந்து மீட்டெடுத்து அதே தூக்குக்கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் இச்சபவத்தில்  மனைவியான கணேசன் பிரதீபா (20) என்பவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
 
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற்  நீதிவான்  அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்;.நசீர்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts