மன்னார் மாவட்டத்தில் மனிதப் புதைகுழி அகழ்விற்கு தீர்வு வேண்டி பொது மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மகஜர் கையளிப்பு

கடந்த காலங்களில் மன்னார் மாவட்டத்தில் மனிதப் புதைகுழி அகழ்வில் பல மனித எச்சங்களை அகழ்ந்தெடுக்கப்பட்ட வருகின்றமை யாவரும் அறிந்த ஒரு விடயமாகும் அந்தவகையில் இவ்வகழ்வில் கண்டெடுக்கப்படும் மனித எச்சங்களில் யாருடையது எனவும் அவர்களில் அரசாங்கம் பதில் கூறவேண்டும் என்பது தொடர்பாக பல கோரிக்கைகளை முன்வைத்து  12 ஆம் திகதி மன்னார் கச்சேரிக்கு முன்பாக 10 மணியளவில் கவண ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வட கிழக்கு மாவட்டங்களில் உள்ள சிவில் அமைப்புக்கள் அரச சார்பற்ற அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் என பல அமைப்புக்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கங்களின் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து  நடாத்தப்பட்ட இக்கவண ஈர்ப்பு போராட்டத்தின் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Related posts