மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு!

மார்ச் மாத நிறைவிற்கு முன்னர் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சு விடுத்துள்ள செயதிக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயாளர்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மூன்று தடவைகள் விமானத்தின் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன.

தற்போது 73 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், மேலும் 27 வகையான மருந்துப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts