மாகாண சபைத் தேர்தல் ஜனவரி மாதம் ஒருபோதும் இடம்பெறாது !

அடுத்து வருடம் ஜனவரி மாதம் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் அது ஒருபோதும் இடம்பெறாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

அந்த முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதைய நிலை குறித்து அஸ்கிரிய மகாநாயகருக்கு விளக்கமளித்த அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவித்தலை விடுப்பதற்கு அரசாங்க தரப்பில் பொது இணக்கப்பாடு ஒன்று இல்லை என்றும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related posts