மாணவர்களுக்கான தொழில்வழிகாட்டல் கருத்தரங்கு

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலகத்தின் மனிதவள அபிவிருத்தி பிரிவினால் பாடசாலை மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் மற்றும் வாழ்க்கைத் திறன் தொடர்பான கருத்தரங்குகள் நடைபெற்றுவருகின்றன.
பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் க.பொ.த உயர்தரம் மற்றும் க.பொ.த சாதாரணதரம் ஆகியவற்றில் கல்வி பயிலும் மாணவர்களிடையே இவ் தொழில் வழிகாட்டல் ஆலோசனைகள் நடைபெற்றுவருகின்றன.
குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றும் உயர்தரமாணவர்களுக்கான கருத்தரங்கு பாடசாலை அதிபர் க.சத்தியமோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் வளவாளராக மண்முனை தென் எருவில் பற்று மனிதவள அபிவிருத்தி உத்தியோகஸ்தர் க.பகீரதன், திறன்விருத்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் இ.விவேகானந்தராஜா, பிரதி அதிபர் க.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts