மான் இறைச்சியுடன் ஒருவர் பொலிஸாரால் கைது கொக்கட்டிச்சோலையில் சம்பவம்

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மாவடிமும்மாரி பிரதேசத்தில் வைத்து விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட மான் இறைச்சிகளுடன் ஒருவர் நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நடமாடியதை அவதானித்த பொலிஸர் குறித்த நபரை சோதனை செய்த போது விற்பனைக்காக மான் இறைசிகளை தன்வசம் வைத்திருந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
 
கைது செய்த நபரை இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
 
 

Related posts