மாலையர்கட்டுப் பிரதேசத்தில் மோட்டார் குண்டு மீட்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட றாணமடு மாலையர்கட்டுப் பிரதேசத்தில் மோட்டார் ரக குண்டு ஒன்று 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த பிரதேசத்தில் உள்ள வாய்க்கால் பகுதியில் வயல் வேலைக்குச் சென்ற நபரொருவர் குண்டினை கண்டதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் குண்டினை பார்வையிட்ட பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் குண்டு செயலிழக்கும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு செயலிழக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
சம்பவம் பற்றிய விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts