மின்சாரப் பிரச்சினைக்கு சித்திரைக்கு முன் தீர்வு ; ரவி கருணாநாயக்க

தற்போது ஏற்பட்டுள்ள மின்சார பிரச்சினைக்கு, சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் தீர்த்துவைக்கப்படுமென, சக்தி, எரிசக்தி மற்றும் வணிக மேம்பாட்டு அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அதற்கான, மின்சாரத்தை வீண்விரயம் செய்யாமல் பயன்படுத்துவதற்கான, ஒத்துழைப்பை நல்குமாறு, மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மிலாகிரி சென். பாவுலு மகளீர் வித்தியாலயத்தில் புதியக் கட்டடத்தை இன்று (03) திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் மின் தொகுதியில் 2010 ஆண்டு வரையிலும் ஒரு மெஹாவோட் மின்சாரம் சேர்க்கப்படவில்லை. ஆகையால், சரியான நேரத்தில் தீர்மானமொன்று எட்டப்படாமையால், நீண்டகால வேலைத்திட்டத்தின் ஊடாகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென அவர் தெரிவித்தார்.

Related posts