மீண்டும் கொரோனா நிதியுதவி

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் முதல் கட்டமாக கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் சுமார் 75 ஆயிரம் குடும்பங்களுக்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Related posts