மீன்பிடிக்கச் சென்றவரை முதலை கடித்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு வாவியில் மீன்பிடிக்கச் சென்றவரை முதலை கடித்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர்முனை கிராமத்தை சேர்ந்த இளம்குடும்பஸ்தர் ஒருவரையே  முதலை பிடித்து இழுத்துச் சென்றுள்ளது என பிரதேச வாசிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.இவ்வாறு முதலையினால் இழுத்துச் சென்றவரை பொதுமக்கள் வாவியில் தேடுதல் மேற்கொண்டு வந்துள்ளார்கள்.இவ்வாறு இழுத்துச் செல்லப்பட்டவர் இன்று சனிக்கிழமை(8.9.2018)மாலை இறந்துள்ளநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(7.9.2018) இரவு இடம்பெற்றுள்ளது.மகிழூர்முனை கிராமத்தை சேர்ந்த சுந்தரலிங்கம்-நவேந்திரன்(வயது-40)எனும் மீனவரே இவ்வாறு  மட்டக்களப்பு வாவியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் பொலிசாரின் உதவியுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related posts