முன்பிள்ளை பருவ அபிவிருத்தி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

லாகுகல பிரதேசத்தில் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
 
அம்பாரை மாவட்டத்தின் லகுகல பிரதேச செயலாளர் பிரிவில் 7.5 மில்லியன் ரூபா நிதியில் அமையவுள்ள முன்பிள்ளை பருவ அபிவிருத்தி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையில் லாகுகல குலனுகே பிரதேசத்தில் நiடைபெற்றது.
 
அம்பாரை  மாவட்ட   முன்பிள்ளைப்  பருவ அபிவிருத்தி  மாவட்ட இணைப்பாளர் சுரஞ்சினியின் ஒழுங்கமைப்பில் குலனுகே தர்மநிகேத விகாரையின் விகாராதிபதி குருந்து கொல்லே சாரானந்த தேரர் தருலிங்கல ஆரன்யா சேனாசனய விகாரையின் விகாராதிபதி சாந்தசிரி ஆகியோரது பிரித் மத அனுஸ்ரானத்துடன் இந் நிகழ்வு நடைபெற்றது.
 
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் முன்பின்னைப்பருவ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதி உதவியுடன் லகுகல பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்படுகின்ற இதன் கட்டத்துக்கான அடிக்கல்லைஇ  மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கஇ பிரதேச செயலாளர் சந்தருவான் அனுருத்த மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டு  நாட்டி வைத்தார்.
 
அத்துடன் லாகுகல  சிவில் பாதுகாப்புப்பிரிவு பொறுப்பதிகாரிஇ லாகுகல பிரதேச செயலக சமூசேவை உத்தியோகத்தர் ரவீந்திர சுரவீர சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கே.திலகேஸ்வரன்இ  முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.ஜீ;.டிஸ்னா மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 

Related posts