முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு குளத்தின் நீர் வரத்து அதிகரித்து நீர் மட்டம் 25.5 அடி

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு குளத்தின் நீர் வரத்து அதிகரித்து நீர் மட்டம் 25.5 அடி காணப்படுவதால் கலிங்கு ஊடாக வான் 1.5 அடி பாய ஆரம்பித்துள்ளது, அதேவேளை வான் கதவு திறக்காமல் கதவுக்கு மேல் 1 அடி பாய ஆரம்பித்துள்ள நிலையில இன்று 7 மணியளவில் திறக்க இருப்பதனால் கீழ் குறித்த பிரதேசங்களில் பேராற்றங்கரையை அண்டிய மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு கேட்கப்படுகின்றனர்.

1. முத்துவிநாயகபுரம்

2. கனேசபுரம்

3. பேராறு

4. பண்டார வன்னி கிராமம்

5. கெருடமடு

6. மன்னகண்டல்

மக்கள் முன்னெச்சரிக்கையாக இருங்கள்,

Related posts