யானையின் தாக்குதலில் பாடசாலை சுற்றுமதில் வீடு சேதம்

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்ஃபட்ஃ ஆனைகட்டிய வெளி நாமகள் வித்தியாலய சுற்றுமதில் நேற்று இரவு வேளையில் யானைகள் உட்புகுந்து உடைத்து சேதப்படுத்தியதாக வித்தியாலய அதிபர் தெரிவித்துள்ளார்.
இவ்வடயம் சம்;மந்தமாக பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிபர் தெரிவித்தார்.

அன்றைய தினம் பாடசாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றுக்குள் உட்புகுந்து வீட்டை உடைத்து சேதப்படுத்தியுள்தாகவும் அன்றைய தினம் வீட்டில் யாரும் இருக்கவில்லை; ஆனால் அவர்கள் தெய்வாதினமாக உயிர்தப்பியுள்ளதாக அறிய முடிகின்றது.
அண்மைக்காலமாக படுவான்கரைப்பிரதேசத்தில் காட்டு யானைகளின அட்டகாசங்களால் மக்கள் இரவு வேளைகளில் அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.

 

Related posts