யானை தாக்கி விவசாயி பலி-சாமாந்தியாற்றில் சம்பவம்

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சாமந்தியாற்றுப்பகுதில் யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம் நேற்று (03) இரவு இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 72 வதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான வெள்ளத்தம்பி குமரகுரு என்பவரே உயிரிழந்தவராவார்.
 
குறித்த பிரதேசத்தில் நெற்செய்கை செய்து மாடு வளர்ப்பிலும் ஈடுபடும் குறித்த நபர் சம்பவ தினத்தன்று தனது வயலில் உள்ள வாடியில் காவலில் இருக்கும் போது யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே பலியானதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்;ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
 
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற்  நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை-தவக்குமார் சடலங்களை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts