யாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு!

மல்லாகம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மல்லாகம் குறித்த பகுதியில்  (ஞாயிற்றுக்கிழமை) இரவு  இரு குழுக்களுக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு உள்ளது. மோதல் சம்பவத்தை கட்டுப்படுத்த    பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜா சுதர்சன் (வயது 28) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த   துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் பகுதியில் வைத்தே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்கது.

Related posts