ரணிலுக்கு ஆதரவு கரம் நீட்டும் ரிஷாட்

பிரதமர் ரணில் விக்கரசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்க தயார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் அமைச்சர்களான அமீர் அலி மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் சற்றுமுன்னர் அலரிமாளிகையில் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், இலங்கை அரசியலில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஐந்து நாடாளுமன்ற பிரிதிநிதித்துவத்தை கொண்ட ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதமரை சந்தித்து ஆதரவை வழங்கியுள்ளது.

Related posts