அரசியல் யாப்பை மதித்து செயற்படுங்கள் – பிரித்தானியா

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் முன்நகர்வுகள் தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மார்க் பீல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

எனவே இலங்கை அரசியல் யாப்பிற்கு மதிப்பளித்து, சகல அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆகவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கடமை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts