ரிஷாட்டின் ஆதரவு ரணிலுக்கு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவு, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே வழங்கப்படுமென, அக்கட்சி தீர்மானித்துள்ளது.

அந்த வகையில், குறித்த கட்சியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமது ஆதரவை, ரணிலுக்கு வழங்கவுள்ளனரென, ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி, தவறிழைத்துவிட்டார். ஜனாதிபதிக்கு​ பொதுமக்களால் வழங்கப்பட்ட வாக்குகளை, அவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். அவருடைய இந்தச் செயற்பாடுகளுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராக வாக்களிப்பர். இது தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியினருடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. யார் எதைக் கதைத்தாலும், எமது தீர்மானத்தை மாற்றப்போவதில்லை” என, முன்னாள் அமைச்சர் பதியுதன் தெரிவித்துள்ளார்.

Related posts