லயன்ஸ் கழகத்தின் முன்னாள் தலைவர் ஆனந்தராஜா அவர்களினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

தற்போது நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள வேளையில் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் பொதுமக்களுக்கு களுவாஞ்சிக்குடி நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் முன்னாள் லயன்ஸ் கழக தலைவரும் இந்நாள் உறுப்பினருமான ‘லயன் திரு.என். ஆனந்தராஜா’ அவர்களின் சொந்த நிதியில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

 

போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் மற்றும் சுரவணையடியூற்று கிராமங்களில் கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்களிக்கு ரூபாய்.2000  பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைத்தார்.

இவர் லயன்ஸ் கழகத்தில் இருந்துகொண்டு ஏழைமக்களுக்கு தனது சொந்த நிதியினூடாகவும் லயன்ஸ் கழகத்தின் மூலமும் உதவிகளைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க உதவிப்பிரதேச செயலாளர் திரு. எஸ். புவனேந்திரன் மற்றும் லயன்ஸ் கழக தற்போதய தலைவர் திரு.புவிராஜ் தலைமையில் கிராம மக்களிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

Related posts