லொறியின் சாரதிக்கு யமனாக மாறியஓரத்தில் நின்ற மரக்கிளை

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பங்கோணி பிரதான வீதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவிக்கின்றனர்.
 
பெரிய கல்லாறைச் சோர்ந்த 37 வயதுடைய கீர்த்தி-சிறிக்காந்தன் ஒரு பிள்ளையின் தந்தையே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
 
 (26) காலை தும்பங்கேணி வீதியூடாக மண் ஏற்றுவதற்காக சென்ற பெரிய ரக லொறி மரத்துடன் மோதியதனாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன்இ குறித்த  லொறியின் சாரதியே இதன் போது உயிரிழந்துள்ளார்.
 
மரத்தின் கிளையுடன் வாகனத்தின் முன் பக்கம் மோதியதனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 
கண்ணாடியை உடைத்து உட்சென்ற கிளை சாரதியின் நெஞ்சில் குத்தியதனாலேயே சாரதி உயிரிழந்துள்ளதுடன்இசாரதிக்கு அருகாமையிலிருந்த உதவியாளர் துரதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
 
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் .களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள பிரேதத்தை பார்வையிட்டதுடன் குறித்த பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தும்படி பொலிசாரிடம் உத்தரவிட்டுள்ளார்.
 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts