வட்டுக்கோட்டையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் தனியார் வகுப்பொன்றில் 2 மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மல்லாகம் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கடந்த சில மாதங்களா குறித்த ஆசிரியரால் மாணவிகள் துன்புறுத்தல்களுக்குள்ளாகியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

41 வயதான கணித பாட ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டதன் பின்னர் குறித்த தனியார் வகுப்பறை சிலரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

தற்போது தனியார் வகுப்பின் பாதுகாப்பிற்கு நடமாடும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts