வட கிழக்கில் அமுலாக்கப்படுகின்ற 40 ஆயிரம் வீடுகள் தொடர்பில் பிரதமரிடம் கூட்டமைப்பின் கோரிக்கை

வடக்கு கிழக்கில் அமுலாக்கப்படுகின்ற 40 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை இந்திய அரசாங்கத்திடமே கையளிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமரை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது குறித்த வீட்டுத்திட்டத்தை இந்தியாவிடம் வழங்குமாறு தாங்கள் கோரியதாகவும், அதனை பிரதமர் ஏற்றுக் கொண்டதாகவும் மாவை சேனாதிராஜா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

Related posts