வாகரையில் 250 ஏக்கர் சேனைச் செய்கை பாதிப்பு : கமநல சேவை திணைக்களம்!

மட்டக்களப்பு வடக்கு விவசாயப் பணிப்பாளர் வலயத்திலுள்ள வாகரைப் பிரதேசத்தில் சுமார் 250 ஏக்கர் சேனைச் செய்கை படைப்புழுவின் தாக்கத்தினால் அழிவடைந்துள்ளதாக கமநல சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகரைப் பிரதேச விவசாயிகளுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) வாகரை கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் பிரதேச விவசாயிகள் தங்களுக்கு படைப்புழுவினால் ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்புக்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், அடுத்த பயிர்ச்செய்கைக்குத் தங்களைத் தயார்படுத்துவதும் இனிவரும் காலங்களில் பூச்சி, பீடை, புழுத் தாக்கங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் விவசாய அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related posts