வீடு புகுந்து கொள்ளை மண்டூர் பிரதேசத்தில் சம்பவம்

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் தம்பலவத்தை பிரதேசத்தில் வீட்டிலிருந்த நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் கொள்ளையிடப்பட் சம்பவம் நேற்று 7) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்

குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் இனம் தெரியாதவர்கள் வீட்டின் கூரையினூடாக உட்புகுந்து அவர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பனிரெண்டு பவுண் நகை மற்றும் ஒண்டரை இலட்சம் ரூபா பணத்தினை கொள்ளையர்கள் களவாடி சென்றுள்ளதாகவும் சம்பவதினத்தன்று வீட்டு உரிமையாளரின் மனைவி தனது பாதுகாப்பின் நிமிர்த்தம் அயலவரின் வீட்டில் இருந்ததாகவும் அவரின் கணவர் தனது தொழிலுக்காக வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் அறிய முடிந்துள்ளது.

சம்பவம் பற்றிய விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Related posts