வீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு 

தாயகத்தில்  வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு   நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்களுக்கு  துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 29 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை முதலைக்குடா பகுதியில் அதன் ஏற்பாட்டாளர் எம். கமல் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது முப்பது துவிச்சக்கர வண்டிகள் மட்டக்களப்பு  பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமைக் கோட்டின் கிழ் வாழ்கின்ற குடும்பத்தின் கல்வி கற்கும் மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு இத்துவிச்சக்கர வண்டில்கள் வீரத்தமிழர் முன்னணியினரால்  உதவி வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts